தைப்பொங்கல் நிகழ்வு – நெல்லியடி முன்பள்ளி

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை நெல்லியடி முன்பள்ளி பொங்கல் நிகழ்வு 2024.01.16 அன்று வதிரி முன்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு – நெல்லியடி முன்பள்ளி

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது தேசிய சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை நெல்லியடி முன்பள்ளியில் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இனறு 2024.02.04 காலை 0827 மணிக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களினால் மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது தேசிய சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இனறு 2024.02.04 காலை 0827 மணிக்கு நடைபெற்றது.

வாழ்வாதார உதவிகள் வழங்குதல்

பொருளாதாரதீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கென வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் 2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கோழிக்ஞ்சுகள், கோழிக்கூடுகள், சுய உணவு உற்பத்திக்கான உணவுப்பாத்திரங்கள், எரிவாயு ஆகியன வழங்கும் நிகழ்வு வடமராட்சி தெற்கு மேறகு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2024.02.01 அன்று சபையின் செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வருடாந்த செயலாற்றுகைத்திட்டம் தயாரித்தல் செயலமர்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரரதேசசபை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை தயாரித்தல் செயலமர்வு 2024.01.26 அன்று சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கணக்காளர் திரு.திருக்குமார் அவர்கள் இச் செயலமர்விற்கான வளவாளராக கலந்தகொண்டார்.

எளிய முறையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு.

"எளிய முறையில் இயற்கை விவசாயம்" கருத்தரங்கு வடமராட்சி அபிவிருத்தி நிறுவகம் மற்றும் புதிய வெளிச்சம் இணை ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் இயற்கை விவசாய விஞ்ஞானி பாமயன் அவர்களால் நடாத்தப்பட்ட எளிய முறையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு.21.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

தைப்பொங்கல் நிகழ்வு – வதிரி முன்பள்ளி

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை வதிரி முன்பள்ளி பொங்கல் நிகழ்வு 2024.01.17 அன்று வதிரி முன்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

உத்தியோகபூர்வ இணையத்தளம் – அங்குரார்ப்பண நிகழ்வு

வட மாகாண உளளுராட்சித் திணைக்களத்தின் ஆலோசனை, வழிகாட்டல் பயிற்சியில் உள்ளுராட்சி சபைகளினால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு இன்று 2024.01.10 காலை 09.00 மணிக்கு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.இதில் முதல் கட்டமாக வடமராட்சி தெற்கு மேற்குபிரதேசசபை, பருத்தித்துறைநகரசபை, வலிகாமம் மேற்கு பிரதேசசபை, வேலணை பிரதேசசபை, நெடுந்தீவு பிரதேசசபை ஆகிய 05 உள்ளுராட்சி சபைகளின் இணையத்தளங்கள் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.இந் நிகழ்வில் வடமாகாண அமைச்சு செலாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேசசபை செயலாளர்கள், இணையத்தள வடிவமைபபு வளவாளர் திரு.கௌரீசன் (Asia Foundation) மற்றும் இணையத்தளத்தை வடிவமைத்த பிரதேசசபை உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை www.vadamaradchysw.ps.gov.lk எனும் முகவரியூடாக பார்வையிடமுடியும்.

2024ஆம் ஆண்டு கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தல்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2024 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2024) பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றபோது...

மென்பந்து துடுப்பாட்டப்போட்டி

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் பதிவுசெய்யப்பட்ட சனசமூகநிலையங்களுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டப்போட்டி 2023.12.23,24 ஆகிய தினங்களில் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடாத்தப்பட்டது. மேற்படி போட்டிகளில் பங்குபற்றுவதற்காக 09 சனசமூக நிலையங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தபோதிலும் இரண்டு சனசமூக நிலையங்கள் பங்குபற்றியிருக்காமையினால் 07 சனசமூக நிலையங்கள் முதற்சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றியிருந்தன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் மண்டான் சனசமூக நிலைய அணியை எதிர்த்து கலாவாணி சனசமூக நிலைய அணி விளையாடியது. இதில் கலாவாணி சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று இறுதியாட்டாதிற்கு தகுதிபெற்றது. அடுத்த அரையிறுதி ஆட்டத்தில் வடகருணை வளர்மதி சனசமூக நிலைய அணியை எதிர்த்து வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி விளையாடியது. இதில் வதிரி வட்டுவத்தை சனசமூகநிலைய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இறுதிப்போட்டியில் கலாவாணி சனசமூக நிலைய அணியை எதிர்த்து வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய மோதியது. இதில் வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. கலாவாணி சனசமூகநிலைய அணி இரண்டாமிடத்தைப்பெற்றுக்கொண்டது. மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் மண்டான் சனசமூகநிலைய அணியை எதிர்த்து வடகருணை வளர்மதி சனசமூக நிலைய அணி மோதியது. இதில் வடகருணை வளர்மதி சனசமூகநிலைய அணி வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. மண்டான் சனசமூகநிலைய அணி நான்காமிடத்தை பெற்றுக்கொண்டது. இறுதி நிகழ்வின் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு சிறப்பித்த வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் அவர்களால் வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வெற்றிப்பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.