பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பான் ஒழுங்குசெய்யப்பட்டது

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேச வீதிகளில் பொதுமக்களால் பெருமளவு பிளாஸ்டிக் போத்தல்கள் வீசப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில்கொண்டு பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதற்காக பிரதேசசபையினால் 06 சேகரிப்பான்கள் (Bottle Collectors) சபைநிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்குதல்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2023 ம் ஆண்டு வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 124 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையால் நிர்வகிக்கப்படும் வதிரி முன்பள்ளியின் பொங்கல் நிகழ்வு 17.01.2025 நடைபெற்றபோது ……..

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையால் நிர்வகிக்கப்படும் வதிரி முன்பள்ளியின் பொங்கல் நிகழ்வு 17.01.2025 நடைபெற்றபோது ……..

கல்லுவம் கிராமத்தில் மரம் நடுகை

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையும் கரணவாய் மேற்கு சமூக மட்ட அமைப்புகளும் இணைந்து 16.01.2025 அன்று கல்லுவம் கிராமத்தில் மரநடுகையில் ஈடுபட்டபோது….

ஆதனவரி அறவிடல் நிகழ்வு – கம்பர்மலை வட்டாரம்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உடுப்பிட்டி உப அலுவலக பிரிவிலுள்ள கம்பர்மலை வட்டாரத்தில் மீள்மதிப்பீடு செய்யப்பட்ட ஆதனங்களின் ஆதனவரி அறவிடல் நிகழ்வு 10.01.2025 அன்று கம்பர்மலை கலாவாணி சனசமூக நிலையத்தில் பிரதேசசபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு ஆதனவரி அறவிடும் நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மேலும் இந் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சு செயலாளர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திருமதி தேவந்தினி பாபு மற்றும் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்

கோவிற்சந்தை வளாகத்தில் மரம்நடுகை நிகழ்வு

வருட ஆரம்ப தினமான 01.01.2025 ம் திகதியன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு உரித்துடைய கோவிற்சந்தையில் பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. இந்நிகழ்வு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை, கோவிற்சந்தை பிரதேச அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கம் மற்றும் வடமராட்சி லயன்ஸ் கழகம் ஆகிய நிறுவனங்களால் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்டது

2025ம் ஆண்டுக்கான அரச கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தல்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2025 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2025) பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றபோது…