விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கரவெட்டி பிரதேச செயலகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை 25.09.2023 – 05.10.2023 வரை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைகுட்பட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளனர். இதற்கமைவாக 25,26.09.2023 ம் திகதிகளில் உடுப்பிட்டி வடக்கு, கரணவாய் வடமேற்கு, மத்தொனி, அல்வாய் தெற்கு, துன்னாலை கிழக்கு, இமையாணன், கரணவாய் வடக்கு, கரவெட்டி மேற்கு, அல்வாய் கிழக்கு மற்றும் துன்னாலை மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வரவுசெலவுத்திட்ட ஆலோசனைகள், முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் – வட்டாரம் – 04

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2024 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வட்டார ரீதியாக பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் பிரதேசசபையால் நடாத்தப்பட்டுவருகின்றது. இதன் தொடர்ச்சியாக சமரபாகு வட்டாரத்திற்கான (4 ம் வட்டாரம்) கலந்துரையால் இன்று (07.09.2023) பிரதேசசபை செயலாளர் திரு கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நியூட்டன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

கோவிற்சந்தை புனரமைப்பு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு சொந்தமான கோவிற்சந்தையை பிரதேசசபையுடன் கோவிற்சந்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல்நடும் நிகழ்வு இன்று (06.09.2023) காலை 8.00 மணிக்கு சபை செயலாளர் திரு. கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியதுடன் திட்ட பெயர் பலகையையும் திறந்து வைத்தார். மேலும் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு. இராசரட்ணம் வரதீஸ்வரன், வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு. செல்லத்துரை பிரணவநாதன், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் மற்றும் பொறியியலாளர் திரு. சிவராமலிங்கம் சரவணகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பல்வேறு திணைக்கள அதிகாரிகள், சபை உத்தியோகத்தர்கள், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுவினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் கரவெட்டி முன்பள்ளி விளையாட்டுப்போட்டி

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் நடாத்தப்படுகின்ற நெல்லியடி முன்பள்ளியின் விளையாட்டு விழா 2023.09.03 அன்று பிரதேசசபை செயலாளர் திரு கணேசன் கம்ஸநாதன் தலைமையில் யா/திரு இருதயக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சுப்பிரமணியம் சற்குணராஜா அவர்கள் பிரதம விருந்தினராகவும் வடமராட்சி கல்வி வலய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. கனகசபை சத்தியசீலன் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

கோவிற்சந்தை புனரமைப்பு செயற்றிட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையுடன் கோவிற்சந்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து கோவிற்சந்தையை புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல்நடும் நிகழ்வு இன்று (06.09.2023) காலை 8.00 மணிக்கு சபை செயலாளர் திரு. கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்களால் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் திட்ட பெயர் பலகையையும் திறந்து வைக்கப்பட்டது. மேலும் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு. இராசரட்ணம் வரதீஸ்வரன், வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு. செல்லத்துரை பிரணவநாதன், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் மற்றும் பொறியியலாளர் திரு. சிவராமலிங்கம் சரவணகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பல்வேறு திணைக்கள அதிகாரிகள், சபை உத்தியோகத்தர்கள், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுவினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சேவைநலன் பாராட்டுவிழா நிகழ்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையில் நீண்டகாலம் கடமையாற்றி ஓய்வுபெற்ற மற்றும் சேவைகாலத்தில் இயற்கையெய்திய ஊழியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு 2023.08.29 ம் திகதியன்று பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை அரச சேவையாளர் கூட்டுறவுச்சங்கத் தலைவர் திருமதி சுமதி கருணாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரு மு.தெய்வேந்திரம், திரு சி.பாலச்சந்திரன் மற்றும் திரு அ..சத்தியதாசன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் அமரர்களான ஆ.ஆனந்தராசா மற்றும் சி.சிவஞானம் ஆகியோர் நினைவுகூரப்பட்டதுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை அரச சேவையாளர் கூட்டுறவுச் சங்கத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

அட்டவணைப்படுத்தப்படாத பதவியணியினருக்கான செயலமர்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் அட்டவணைப்படுத்தப்படாத பதவியணியைச் சேர்ந்த ஊழியர்களுக்கான அலுவலக நடைமுறை மற்றும் நேர் சிந்தனை குறித்த ஒரு நாள் பயிற்சிநெறி கிளிநொச்சியில் அமைந்துள்ள மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில் 2022.12.29 அன்று நடைபெற்றது.

முன்பள்ளி மாணவர்களுக்கான சத்துணவு வழங்கும் செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு

பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (LDSP) கீழ் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையினால் போசாக்கு துணை உணவு வழங்கும் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு முன்பள்ளிகளை சேர்ந்த மாணவர்களுக்கு போசாக்கு துணை உணவு வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் போதான பதிவுகள் சில.

நெல்லியடி முன்பள்ளிக்கான திறன்பலகை (Smart Board) கற்றல் முறை ஆரம்ப நிகழ்வு.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் நடாத்தப்படுகின்ற நெல்லியடி முன்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இலகுவாக்கும் நோக்குடன் Smart Board மற்றும் மாணவர்களுக்கான சீருடைகள் என்பன அமரர்களான சின்னையா செல்லம்மா குடும்பத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 2023.07.13 ம் திகதியன்று நெல்லியடி முன்பள்ளியில் பிரதேசசபை செயலாளர் கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமரர்களான சின்னையா செல்லம்மா குடும்பத்தினர், ஓய்வு பெற்ற அதிபர் திரு.வ.கணேசமூர்த்தி, நெல்லியடி உப அலுவலக பொறுப்பதிகாரி, முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். மேற்படி Smart Board மற்றும் மாணவர்களுக்கான சீருடைகள் என்பவற்றை அன்பளிப்பாக வழங்கிய அமரர்களான சின்னையா செல்லம்மா குடும்பத்தினருக்கு பிரதேசசபை சார்பாக இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.