அலுவலக நிர்வாக நடைமுறைகள் – செயலமர்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை உத்தியோகத்தர்களுக்கான அலுவலக நிர்வாக நடைமுறைகளும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் தொடர்பான செயலமர்வு 2024.02.14 அன்று சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண பிரதிப்பிரதம செயலாளர் அலுவலக நிர்வாக உத்தியோகத்தர் திரு்ஆலாறன்ஸ் அவர்கள் இச் செயலமர்விற்கான வளவாளராக கலந்தகொண்டார்.

தைப்பொங்கல் நிகழ்வு – நெல்லியடி முன்பள்ளி

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை நெல்லியடி முன்பள்ளி பொங்கல் நிகழ்வு 2024.01.16 அன்று வதிரி முன்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு – நெல்லியடி முன்பள்ளி

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது தேசிய சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை நெல்லியடி முன்பள்ளியில் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இனறு 2024.02.04 காலை 0827 மணிக்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களினால் மரம் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

76வது தேசிய சுதந்திரதின நிகழ்வு

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76வது தேசிய சுதந்திரதினத்தை கொண்டாடும் வகையில் வடமராட்சி தெற்குமேற்கு பிரதேசசபை தலைமை அலுவலகத்தில் தேசியக்கொடியேற்றும் நிகழ்வு இனறு 2024.02.04 காலை 0827 மணிக்கு நடைபெற்றது.

வாழ்வாதார உதவிகள் வழங்குதல்

பொருளாதாரதீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குவதற்கென வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் 2023ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கோழிக்ஞ்சுகள், கோழிக்கூடுகள், சுய உணவு உற்பத்திக்கான உணவுப்பாத்திரங்கள், எரிவாயு ஆகியன வழங்கும் நிகழ்வு வடமராட்சி தெற்கு மேறகு பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் கடந்த 2024.02.01 அன்று சபையின் செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வருடாந்த செயலாற்றுகைத்திட்டம் தயாரித்தல் செயலமர்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரரதேசசபை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த செயற்பாட்டறிக்கை தயாரித்தல் செயலமர்வு 2024.01.26 அன்று சபையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. கணக்காளர் திரு.திருக்குமார் அவர்கள் இச் செயலமர்விற்கான வளவாளராக கலந்தகொண்டார்.

எளிய முறையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு.

"எளிய முறையில் இயற்கை விவசாயம்" கருத்தரங்கு வடமராட்சி அபிவிருத்தி நிறுவகம் மற்றும் புதிய வெளிச்சம் இணை ஏற்பாட்டில் தமிழ்நாட்டின் இயற்கை விவசாய விஞ்ஞானி பாமயன் அவர்களால் நடாத்தப்பட்ட எளிய முறையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு.21.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிமுதல் மாலை 4.30 மணி வரை, வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

தைப்பொங்கல் நிகழ்வு – வதிரி முன்பள்ளி

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை வதிரி முன்பள்ளி பொங்கல் நிகழ்வு 2024.01.17 அன்று வதிரி முன்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

உத்தியோகபூர்வ இணையத்தளம் – அங்குரார்ப்பண நிகழ்வு

வட மாகாண உளளுராட்சித் திணைக்களத்தின் ஆலோசனை, வழிகாட்டல் பயிற்சியில் உள்ளுராட்சி சபைகளினால் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் நிகழ்வு இன்று 2024.01.10 காலை 09.00 மணிக்கு கௌரவ ஆளுநர் அவர்களின் தலைமையில், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.இதில் முதல் கட்டமாக வடமராட்சி தெற்கு மேற்குபிரதேசசபை, பருத்தித்துறைநகரசபை, வலிகாமம் மேற்கு பிரதேசசபை, வேலணை பிரதேசசபை, நெடுந்தீவு பிரதேசசபை ஆகிய 05 உள்ளுராட்சி சபைகளின் இணையத்தளங்கள் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.இந் நிகழ்வில் வடமாகாண அமைச்சு செலாளர்கள், உள்ளுராட்சி ஆணையாளர், உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேசசபை செயலாளர்கள், இணையத்தள வடிவமைபபு வளவாளர் திரு.கௌரீசன் (Asia Foundation) மற்றும் இணையத்தளத்தை வடிவமைத்த பிரதேசசபை உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சித் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை www.vadamaradchysw.ps.gov.lk எனும் முகவரியூடாக பார்வையிடமுடியும்.