LDSP வேலைத்திட்டத்தினை சிறப்பாக நிறைவுசெய்தமைக்கான பாராட்டுச்சான்றிதழ்

உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் 2019 – 2024 வரையான காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களில் செயல்படுத்தப்பட்ட பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (LDSP) நிறைவுநாள் நிகழ்வு 2024.12.27 ம் திகதி பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பாக செயல்பட்ட 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கௌரவ ஆளுநர் அவர்களினால் மெச்சுரை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கும் கௌரவ ஆளுநர் அவர்களினால் மெச்சுரை சான்றிதழ் வழங்கப்பட்டது.

தேசிய வாசிப்புமாத நிகழ்விற்கான விருது வழங்கல்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் வதிரி பொதுநூலகமானது 2023 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தில் வாசிப்பு ஊக்குவிப்பு திட்டங்களை செயற்படுத்தியமையை பாராட்டி தேசிய நூலகம் மற்றும் ஆவணமாக்கல் சபையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. டிசம்பர் 19 ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் வதிரி பொதுநூலக நூலகர் திரு. கந்தசாமி ஈஸ்வரன் அவர்கள் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்.

எலிக்காய்ச்சலிற்கான தடுப்பு மருந்து வழங்கல்

இன்று கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எலிக்காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.

வெள்ள அனர்த்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை குறைக்கும் செயற்பாடுகளில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை

வெள்ள அனர்த்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களை குறைக்கும் செயற்பாடுகளில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை

வதிரி முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் வதிரி முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த கலைநிகழ்வு பிரதேசசபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு முன்பள்ளி மழலைகளிற்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மழலைகளிற்கான பரிசளிப்பு விழா

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு முன்பள்ளி மழலைகளிற்கிடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மழலைகளிற்கான பரிசளிப்பு விழா

Best Annual Report and Accounts Awards for Public sector 2023

இலங்கை பட்டயக் கணக்கு நிறுவனத்தினால் சிறந்த வருடாந்த கணக்குகளை சமர்ப்பிக்கும் அரச நிறுவனங்களுக்கு வழங்னப்படும் 2023ம் ஆண்டுக்கான விருது கடந்த 2024.12.02 அன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு வழங்கப்பட்டது.

வதிரி முன்பள்ளி மாணவர் கௌரவிப்பும், கலைவிழாவும் – 2024

2024ம் ஆண்டுக்கான வதிரி முன்பள்ளி மாணவர் கௌரவிப்பும், கலைவிழாவும் 2024.12.24ஞாயிற்றுக்கிழமை காலை 09:30மணிக்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், யா/நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் திரு.க.கிருஷ்ணகுமார் அவர்கள் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலயக்கல்வி அலுவலக முன்பள்ளி உதவிக்கல்விபப்ணிப்பாளர் திரு.கனகசபை சத்தியசீலன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள். 2024ம் ஆண்டு வதிரிமுன்பள்ளியில் தமது முன்பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து தரம் 01ல் கல்வி கற்பதற்காக முன்பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்களுக்கான பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

4000 பனம் விதைகள் கப்புது இந்துப்பிட்டியில் விதைக்கப்பட்டது.

23.10.2024 அன்று கப்புதூ பிரதேசத்தில் உள்ள இரந்துப்பிட்டியில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையால் பிரதேச இளைஞர்களின் ஒத்துழைப்புடன் சுமார் 4000 பனை விதைகள் நடுகைசெய்யப்பட்டது.

கோட்ட மட்ட போட்டியில் மூன்றாமிடம் பெற்ற நெல்லியடி முன்பள்ளி மாணவர்களின் நடனம்.(வீடியோ இணைப்பு)

2024ம் ஆண்டிற்கான வடமராட்சிக் கல்வி வலய முன்பள்ளிகளின் கலைவிழா நிகழ்வில் பங்குபற்றுவதற்காக வடமராட்சி வலயத்திற்குட்பட்ட அனைத்து முன்பள்ளிகளுக்கிடையிலும் கலைநிகழ்வுப்போட்டிகள் நடாத்தப்பட்டன. கரவெட்டிக்கோட்டம், பருத்தித்துறைக் கோட்டம், மருதங்கேணிக்கோட்டம் ஆகிய மூன்று கோட்ட மட்ட கலைநிகழ்வுப் போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் 09  நிகழ்வுகள் தெரிவுசெய்யப்பட்டு, அவை வடமராட்சிக் கல்வி வலய முன்பள்ளிகளின் கலைவிழா நிகழ்வில் பங்குபற்ற தகுதிபெறும்.
48 முன்பள்ளிகளைக் கொண்ட கரவெட்டிக் கோட்டமடட்ட முன்பள்ளிகளுக்கிடையிலான கலைநிகழ்வுப்போட்டிகள் 2024.09.01 இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் நெல்லியடி முன்பள்ளியில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் நெல்லியடி முன்பள்ளி மாணவர்களின் கிராமிய நடனம்  மூன்றாம் இடத்தைப்பெற்றுக்கொண்டதுடன்,  வடமராட்சிக் கல்வி வலய முன்பள்ளிகளின் கலைவிழா நிகழ்வில் பங்குபற்றுவதற்கும் தகுதிபெற்றுள்ளது.
மேற்படி கிராமிய நடனத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், இந் நடனநிகழ்வினை சிறப்பாக பயிற்றுவித்த ஆசிரியர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பதுடன், இந் நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

வீடியோ பார்வையிட இங்கே அழுத்துக