வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் வதிரி பொதுநூலகமானது 2023 ம் ஆண்டு தேசிய வாசிப்பு மாதத்தில் வாசிப்பு ஊக்குவிப்பு திட்டங்களை செயற்படுத்தியமையை பாராட்டி தேசிய நூலகம் மற்றும் ஆவணமாக்கல் சபையினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. டிசம்பர் 19 ம் திகதி விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் வதிரி பொதுநூலக நூலகர் திரு. கந்தசாமி ஈஸ்வரன் அவர்கள் விருது மற்றும் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டார்.