உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் 2019 – 2024 வரையான காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களில் செயல்படுத்தப்பட்ட பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் (LDSP) நிறைவுநாள் நிகழ்வு 2024.12.27 ம் திகதி பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பாக செயல்பட்ட 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கௌரவ ஆளுநர் அவர்களினால் மெச்சுரை சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கும் கௌரவ ஆளுநர் அவர்களினால் மெச்சுரை சான்றிதழ் வழங்கப்பட்டது.