கட்டட நிர்மாண அனுமதி

உள்ளூராட்சி மன்றங்களின் எல்லைக்குள்; மேற்கொள்ளப்படுகின்ற நிருமாணப் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் ஊடாக அந்த எல்லைக்குள் வசிக்கின்ற மக்களது சுகாதாரம், ஆரோக்கியம், வசதிகள் மற்றும் நலனோம்பல் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தும் சட்டரீதியான அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப் பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து நிருமாணப் பணிகளும், உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படுகின்ற நிருமாண அனுமதிப்பத்திரத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இந்த அனுமதிப்பத்திரத்தை வழங்கும்போது ஆரோக்கியம், சுகாதாரம், மற்றும் நலனோம்பல் வசதிகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பின்பற்றுதல் வேண்டும்.

விண்ணப்பப்படிவம் 

கட்டட நிர்மாண அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற  விண்ணப்பப்பத்திரங்களை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உப அலுவலகங்களான நெல்லியடி உப அலுவலகம், கட்டைவேலி உப அலுவலகம், உடுப்பிட்டி உப அலுவலகம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும். அல்லது  வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும்.

விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக

விண்ணப்பப்படிவத்தை தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்துக.

சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய ஆவணங்கள்

(அ) கட்டிட வரைபடம்- மூலப் பிரதிகள் -3

(ஆ) நடப்பு ஆண்டிற்கான மதிப்பீட்டு வரி செலுத்தப்பட்ட பற்றுச்சீட்டு - பிரதி 1.

(இ) நில உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை - புகைப்பட பிரதி 1

(ஈ) 30 ஆண்டுகளுக்கான வரலாற்றுத் தாள்கள்- புகைப்படப் பிரதிகள், ஆனால் அசல் பிரதி ஆரம்ப சரிபார்ப்புக்குக் கிடைக்க வேண்டும்.

(உ) நில அளவைப்படம் - புகைப்பட பிரதி 3, ஆனால் அசல் பிரதி ஆரம்ப சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்.

(ஊ) சட்ட ரீதியான காணி ஆவணம் ( உறுதிப்படுத்தப்பட்டது) புகைப்பட பிரதிகள் -3, ஆனால் அசல் பிரதி முதற்கட்ட  சரிபார்ப்புக்கு கிடைக்க வேண்டும்.

(எ) உபபிரிவிடல் - பிரதி 1 (தேவை ஏற்படின்).

(ஏ) காணி 6 பேர்ச்களுக்கு குறைவாக இருந்தால் நகர அபிவிருத்தி   அதிகாரசபை அனுமதி பெற வேண்டும் புகைப்பட பிரதிகள் - 3

(ஐ) (1) வதிவிடம் அல்லாத கட்டடம் எனின் 400 M2 க்கு மேல் நகர அபிவிருத்தி அதிகாரசபை அனுமதி பெறப்பட வேண்டும் - புகைப்பட பிரதி - 3

(2) வதிவிடக்கட்டட நிர்மாணம் எனின் 1000 M2 பரப்பளவு அல்லது 15 உயரத்திற்கு அதிகமாக இருப்பின் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி பெறப்படவேண்டும்.

(ஒ) நிலம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தால், பிரதேச செயலகத்திலிருந்து நீண்டகால குத்தகை ஒப்பந்தம் பெறப்பட வேண்டும். தனியார் அல்லாத நிலத்தில் கட்டிட அனுமதி வழங்கப்பட வேண்டுமானால், பிரதேசசெயலக அனுமதி தேவை 

செலுத்த வேண்டிய கட்டணம்

அபிவிருத்தியின் தன்மைக்கேற்ப மாறுபடும். நீங்கள் சேவை கருமபீடத்துடன் கட்;டண அட்டவணையை பரீட்சீர்த்து கொள்ளலாம்.

சேவை வழங்கல் உத்தியோகத்தர்கள் 

முன் அலுவலக அதிகாரி; மற்றும் விடய உத்தியோகத்தர்

தொழில்நுட்ப அதிகாரி அல்லது பொது சுகாதார வைத்திய அதிகாரி

சேவையை நிறைவுசெய்வதற்கு எடுக்ககூடிய குறைந்த கால எல்லை 

14 நாட்கள் - 21 நாட்கள் (துல்லியமான ஆவணங்கள் சமர்ப்பிக்கின்ற பட்சத்தில்)


பின்செல்க
முகப்பு