எம்மைப்பற்றி
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை
தோற்றம்
பிரித்தானிய ஆட்சியின் இறுதிப்பகுதியில் இலங்கையில் உள்ளுராட்சி தொடர்பான பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 1865 மற்றும் 1866 ஆம் காலப்பகுதியில்; கொழும்பு, கண்டி, காலி ஆகிய நகரங்களில் மாநகர சபைகள், 1865ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாநகர கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டன.
1871ஆம் ஆண்டின் 26ம் இலக்க கிராமக் குழுக்கள் சட்ட விதி (Village Committees Ordinance) நிறைவேற்றப்படதன் பிரகாரம் கிராம சபைகள் நிறுவப்பட்டன. பின்னர் 1892 இல் சிறிய நகரங்களில் சுகாதார குழுக்கள் (sanitary boards) அமைக்கப்பட்டன.
இதனிடையே 1928 ஆம் ஆண்டில் டொனமூர் ஆணைக்குழுவின் விதப்புரைக்கு அமைவாக உள்ளுராட்சித் திணைக்களம் தாபிக்கப்பட்டது. தொடர்ந்து 1940 இலும் 1946 இலும் முறையே பட்டின சபைகளும் (Town council ordinance 1939 of No 61) நகரசபைகளும் (Urban Council Ordinance 1942 of No 03) உருவாகின.
அதன் பின்னர் 1980 ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க சட்டத்திற்கு அமைவாக மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாக்கப்பட்டபோது கிராமசபைகளுக்கு உரிய அதிகாரங்கள் மாவட்ட அபிவிருத்திச் சபைகளுக்கு கையளிக்கப்பட்டது. அரசியல் நோக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பல காரணங்களால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாமல் இல்லாதொழிந்தது.
இதன் பின்னர் 1987ஆம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திச் சபையின் கீழ் உப அலுவலகங்களாக காணப்பட்ட பட்டின சபைகளும் கிராம சபைகளும் 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் ஒன்றாக்கப்பட்டு பிரதேச சபைகள் தாபிக்கப்பட்டது.
இதற்கமைய நெல்லியடி பட்டினசபை, கட்டைவேலி கிராம சபை, உடுப்பிட்டி கிராம சபை என்பன 1987ம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் ஒன்றாக்கப்பட்டு திக்கம் வீதி வதிரியில் உள்ள பட்டினசபை அலுவலகத்தில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையாக இயங்கியது.
அதனைத் தொடர்ந்து கொடிகாமம் வீதியில் உள்ள தனியார் வீட்டில் 2003ம் ஆண்டு வரை வாடகைக்கு இயங்கிவந்தது.
2003ம் ஆண்டு பிரதேச சபை தனக்கென ஒரு காணியை கொள்வனவு செய்து பிரமாண்டமான ஒரு புதிய கட்டடம் அமைக்கப்பட்டு, கருவறை முதல் கல்லறை வரை என்னும் தொனிப்பொருளுக்கிணங்க மக்களுக்கு சேவையாற்றி வருகின்றது.
பிரதேச சபையானது அதன் பிரதேசத்தில் பகிரங்க சுகாதார பொது நிருவாக அதிகார சபையாகவும் பிரதான பொதுவழிகள் தவிர்ந்த அனைத்து பொதுவழிகளினதும் தொடர்புகளினதும் பொது நிருவாக அதிகார சபையாகவும் செயற்பட்டு வருகின்றது.
சபையின் ஆளுகைப் பிரதேசம்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையானது, இலங்கையின் வடக்கு மாகாணத்தின் யாழ் மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்தின் இதயப் பகுதியில், 35 கிராம உத்தியோகத்தர் பிரிவினை உள்ளடக்கிய 88 சதுர கிலோமீற்றர் பரப்பளவினைக்கொண்ட பிரதேசமாகும். இதில் 63.7 சதுரகிலோமீட்டர் நிலப்பகுதியாகக் காணப்படுகின்றது. அத்துடன் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லையே வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் நிர்வாக எல்லையாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எமது சபையின் எல்லைகள் கீழ்க்குறிப்பிடப்பட்டதற்கமைய வரையறுக்கப்பட்டுள்ளது.
வடக்கு - வல்வெட்டித்துறை நகராட்சிமன்றத்தின் ஆளுகைப் பிரதேசம் மற்றும்
பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம்
கிழக்கு - பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம்
தெற்கு - சாவகச்சேரி பிரதேசசபையின் ஆளுகைப் பிரதேசம்
மேற்கு - வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம்
எமது சபையானது 68.9 சதுர கிலோமீற்றர் விஸ்தீரணமுடைய 19 வட்டார பிரிவுகளை கொண்ட 35 கிராமசேவையாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதான 187 கிராமங்களை கொண்டுள்ள பாரிய பிரதேசமாக காணப்படுகின்றது. சபையின் நிர்வாக நோக்கங்களிற்காகவும் மக்கள் சேவையினை இலகுவாக பெற்றுக்கொள்ளும் நோக்கிலும் நெல்லியடி, உடுப்பிட்டி மற்றும் கட்டைவேலி எனும் 03 உப அலுவலகப் பிரிவுகளை கொண்டுள்ளது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் உட்கட்டமைப்பு பிரிவுகள்
உப அலுவலகங்கள்-
1. நெல்லியடி உப அலுவலகம்.
2. உடுப்பிட்டி உப அலுவலகம்.
3. கட்டைவேலி உப அலுவலகம்.
சந்தைகள்-
1.நெல்லியடி நவீன சந்தை
2.நெல்லியடி பொதுச் சந்தை
3. கொட்டடிச் சந்தை
4. சாண்டா சந்தை
5. கோயிற் சந்தை
6. மண்டான் சந்தை
7. அந்திரான் சந்தை
8 .துன்னாலை வடக்கு பொதுச் சந்தை
நூலகங்கள் -
1. வதிரி பொது நூலகம்.
2. உடுப்பிட்டி பொது நூலகம்.
3. கட்டைவேலி பொது நூலகம்.
ஆயுள்வேத வைத்தியசாலைகள்-
1. உடுப்பிட்டி ஆயுர்வேத வைத்தியசாலை.
2. கட்டைவேலி ஆயுர்வேத வைத்தியசாலை.
3. கரவெட்டி ஆயுர்வேத வைத்தியசாலை.
முன்பள்ளிகள் -
1. நெல்லியடி முன்பள்ளி
2. வதிரி முன்பள்ளி முள்ளி
சேதனப்பசளை உற்பத்தி நிலையம்.
இந் நிலையமானது ஜப்பான் அரசின் நிதி உதவித்திட்டத்தின் கீழ் 2021ம் ஆண்டு முள்ளி பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் இயந்திரமயமாக்கப்பட்ட சேதன பசளை உற்பத்தி நிலையமாக இது மட்டுமே விளங்குகின்றதுடன் இலங்கைத்தீவில் நிறுவப்பட்ட மூன்றாவது நிலையமாகவும் காணப்படுகின்றது. இவ் நிலையத்தின் மூலம் நாளாந்தம் சுமார் 50 மெ.தொன் வரையான சேதன கழிவுகள் பரிகரிக்கக்கூடிய கொள்ளளவுடையது.
சபையின் சனத்தொகைப் பரம்பல் மொத்த சனத்தொகை 46104 குடும்பங்களின் எண்ணிக்கை 15327 சபையின் இன ரீதியான பரம்பல் தமிழர் 46089 முஸ்லீம் 12 சிங்களவர் 3 சபையின் மத ரீதியான பரம்பல் இந்து 44712 கிறிஸ்தவர் 1377 இஸ்லாம் 12 பௌத்தம் 3 தொழில்செய்வோர் விபரம் அரச தொழில் 2725 வணிகம் 1952 விவசாயம் 2221 கடற்றொழில் 176 ஏனையவை 8830 கலாசார மதக் கட்டமைப்புகள் இந்து ஆலயங்கள் 111 தேவாலயங்கள் 09 பள்ளிவாசல் 0 விகாரை 0
சபையின் பிரதான வருமான மூலகங்கள்
1.ஆதன வரி
சபையின் பிரதான வருமான மூலகங்களில் ஆதன வரியும் ஒன்றாகக் காணப்படுகின்றது. நெல்லியடி, உடுப்பிட்டி பிரிவின் கீழ் 1967ம் ஆண்டு வரி மதிப்பீடு செய்ததன் பிரகாரமே 2021ம் ஆண்டு வரை ஆதனவரி அறவிடப்பட்டுவந்தது. எனினும் 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய வரி மதிப்பீடானது நெல்லியடி உப அலுவலகப் பிரிவிற்கு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு 2022ம் ஆண்டிலிருந்து புதிய வரி வீதத்திற்கு அமைவாக அறவிடப்பட்டுவருகின்றது. இது சபையின் வருமானத்தில் புதிய மைல் கல்லை எட்டுவதற்கு வழிவகுத்துள்ளது. மேலும் உடுப்பிட்டி, கட்டைவேலி உப அலுவலகப் பிரிவுகளிற்கான புதிய வரிமதிப்பீடு மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2.முத்திரைத் தீர்வை
சபையின் சொந்த வருமானத்தில் எறத்தாழ 36மூ வரை முத்திரைத் தீர்வை பங்களிக்கின்றது. இது எமது பிரதேசத்தில் காணப்படும் ஆதனத்தின் அதிகரித்த பெறுமதியினை சுட்டிகாட்டி நிற்கின்றது. குறிப்பாக நெல்லியடி நகரம் வதிரி, மாலிசந்தி, உடுப்பிட்டி பிரதேசத்தில் இவ் அதிகரித்த பெறுமதி உடைய ஆதனங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. முத்திரை தீர்வையானது, 1987ம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 129ம் பிரிவின் (2)ஆ பகுதியின் பிரகாரமும் 1982ஆம் ஆண்டின் 43 இலக்க முத்திரைத் தீர்வைகள் சட்டத்தின் பிரகாரமும் பிரதேச சபையின் நிதியத்திற்கு செலுத்தவேண்டியது கடப்பாட்டைக்கொண்டுள்ளது.
3.நீதி மன்ற தண்டப்பணம் இவ் வருமான மூலமும் பிரதேச சபையின் வருமானத்தில் அண்ணளவாக 3மூ தொடக்கம் 5மூ வரை பங்காற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. எமது பிரதேச எல்லைப்பரப்பிற்குள் நீதவான் நீதிமன்றத்தினால் அறவிடப்படும் எல்லாத் தண்டப்பணஙகளும் 1987ம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 129ம் பிரிவின் (2)அ பகுதியின் பிரகாரம் நீதவான் நீதிமன்றத்தினால் சபையின் நிதியத்திற்கு செலுத்தவேண்டியது கடப்பாட்டைக்கொண்டுள்ளது.
4.குத்தகை சபையின் கீழ் 9 சந்தைகளும் 12 இறைச்சிக் கடைகளும் இயங்கிவருகின்றன. இவற்றின் குத்தகையின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானமும் (சராசரியாக ஆண்டுதோறும் 20 மில்லியன்) சபையின் வருமானத்தில் பெரும் பங்காற்றுகின்றது. அத்துடன் நெல்லியடி மற்றும் உடுப்பிட்டி சந்தைகள் இப் பிரதேச விவசாயிகளின் உற்பத்திகளை இலகுவாகச் சந்தைப்டுத்துவதற்கு பாரிய பங்காற்றிவருகின்றதுடன் இவ் விடயம் அனைத்து நடவடிக்கைகளையும் பிரதேசசபை முறைப்படுத்தி கண்காணித்துவருகின்றது.
5.வாடகை சபைக்குச் சொந்தமான 83 கடைகள் நீண்ட கால வாடகை அடிப்படையில் உள்ளூர் வர்த்தகர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபா 3இ342இ450.00 ஆண்டு வருமானமாக சபைக்கு கிடைக்கப்பெறுகின்றது.
6.திண்மத் திரவ கழிவகற்றல் சேவை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எமது சபையின் பிரதேசம் அபிவிருத்தி அடைந்த பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் கொங்கிறீட் இடப்பட்டு மூடப்பட்ட மலசலகூடக்குழிக்கான (ளுநயட Pவை) அனுமதியே பரிந்துரைக்கப்படுகின்றது. எனவே சபையினால் திரவக் கழிவகற்றறல் சேவையின் தேவை மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இதன்மூலமும் சபைக்கு கணிசமான வருமானம் கிடைக்கப்பெறுகின்றது.
எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள்
1.கழிவு நீர் பரிகரிப்பு தொகுதி ஒன்றினை நிறுவுதல்
2.வர்த்தக கட்டடத் தொகுதி ஒன்றை நெல்லியடி நகரத்தில் அமைத்தல்
3.பொது விளையாட்டு மைதானம் ஒன்றினை அமைத்தல்
4.பிரதான நவீன நூலகம் ஒன்றினை அமைத்தல்
5.நகர மண்டபம் ஒன்றினை அமைத்தல்
6.சபைக்குரிய கட்டடங்களில் 400 KW கொள்ளளவு உடைய சூரிய படல்; தொகுதி அமைத்தல்
7.நவீன முறையிலான வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை அமைத்தல் 8.எரிபொருள் நிரப்பு நிலையம் நிறுவுதல்
