2024ஆம் ஆண்டு கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தல்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2024 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (01.01.2024) பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றபோது...

மென்பந்து துடுப்பாட்டப்போட்டி

உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையினால் பதிவுசெய்யப்பட்ட சனசமூகநிலையங்களுக்கிடையிலான மென்பந்து துடுப்பாட்டப்போட்டி 2023.12.23,24 ஆகிய தினங்களில் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் நடாத்தப்பட்டது. மேற்படி போட்டிகளில் பங்குபற்றுவதற்காக 09 சனசமூக நிலையங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தபோதிலும் இரண்டு சனசமூக நிலையங்கள் பங்குபற்றியிருக்காமையினால் 07 சனசமூக நிலையங்கள் முதற்சுற்றுப்போட்டிகளில் பங்குபற்றியிருந்தன. முதலாவது அரையிறுதிப் போட்டியில் மண்டான் சனசமூக நிலைய அணியை எதிர்த்து கலாவாணி சனசமூக நிலைய அணி விளையாடியது. இதில் கலாவாணி சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று இறுதியாட்டாதிற்கு தகுதிபெற்றது. அடுத்த அரையிறுதி ஆட்டத்தில் வடகருணை வளர்மதி சனசமூக நிலைய அணியை எதிர்த்து வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி விளையாடியது. இதில் வதிரி வட்டுவத்தை சனசமூகநிலைய அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இறுதிப்போட்டியில் கலாவாணி சனசமூக நிலைய அணியை எதிர்த்து வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய மோதியது. இதில் வதிரி வட்டுவத்தை சனசமூக நிலைய அணி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கியது. கலாவாணி சனசமூகநிலைய அணி இரண்டாமிடத்தைப்பெற்றுக்கொண்டது. மூன்றாமிடத்திற்கான ஆட்டத்தில் மண்டான் சனசமூகநிலைய அணியை எதிர்த்து வடகருணை வளர்மதி சனசமூக நிலைய அணி மோதியது. இதில் வடகருணை வளர்மதி சனசமூகநிலைய அணி வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. மண்டான் சனசமூகநிலைய அணி நான்காமிடத்தை பெற்றுக்கொண்டது. இறுதி நிகழ்வின் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டு சிறப்பித்த வடக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் திரு.பா.முகுந்தன் அவர்களால் வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வெற்றிப்பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மண்டப முன்பதிவு

மண்டப முன்பதிவு
Calendar is loading...
Powered by Booking Calendar
-
Available
 
-
Booked
 
-
Pending

விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கரவெட்டி பிரதேச செயலகம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தை 25.09.2023 – 05.10.2023 வரை வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைகுட்பட்ட பிரதேசங்களில் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளனர். இதற்கமைவாக 25,26.09.2023 ம் திகதிகளில் உடுப்பிட்டி வடக்கு, கரணவாய் வடமேற்கு, மத்தொனி, அல்வாய் தெற்கு, துன்னாலை கிழக்கு, இமையாணன், கரணவாய் வடக்கு, கரவெட்டி மேற்கு, அல்வாய் கிழக்கு மற்றும் துன்னாலை மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வரவுசெலவுத்திட்ட ஆலோசனைகள், முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் – வட்டாரம் – 04

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையின் 2024 ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை வட்டார ரீதியாக பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்கள் பிரதேசசபையால் நடாத்தப்பட்டுவருகின்றது. இதன் தொடர்ச்சியாக சமரபாகு வட்டாரத்திற்கான (4 ம் வட்டாரம்) கலந்துரையால் இன்று (07.09.2023) பிரதேசசபை செயலாளர் திரு கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நியூட்டன் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது.

கோவிற்சந்தை புனரமைப்பு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்கு சொந்தமான கோவிற்சந்தையை பிரதேசசபையுடன் கோவிற்சந்தை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து புனரமைப்பு செய்வதற்கான அடிக்கல்நடும் நிகழ்வு இன்று (06.09.2023) காலை 8.00 மணிக்கு சபை செயலாளர் திரு. கணேசன் கம்ஸநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் அவர்கள் திட்டத்திற்கான அடிக்கல்லை நாட்டியதுடன் திட்ட பெயர் பலகையையும் திறந்து வைத்தார். மேலும் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு. இராசரட்ணம் வரதீஸ்வரன், வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு. செல்லத்துரை பிரணவநாதன், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை சிவசிதம்பரம் மற்றும் பொறியியலாளர் திரு. சிவராமலிங்கம் சரவணகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டதுடன் பல்வேறு திணைக்கள அதிகாரிகள், சபை உத்தியோகத்தர்கள், கோவிற்சந்தை அபிவிருத்தி குழுவினர் மற்றும் பிரதேச பொதுமக்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.