வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட சனசமூகநிலையப் பிரதிநிதிகளுடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களின் கலந்துரையாடல் நிகழ்வு 2024.02.22 மாலை 0500 மணியளவில் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ.எம்.சாள்ஸ் அவர்களுடன் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்களும், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் திரு.செ.பிரணவநாதன் அவர்களும், யாழ்மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களும் கலந்துகொண்டதுடன், வடமராட்சி தெற்கு மேற்குப்பிரதேசசபைக்குட்பட்ட சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் ஏறத்தாழ 200 பேர் வரையில் பங்குபற்றியிருந்தனர்.