2023ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்புமாத நிகழ்வின் பரிசளிப்பு விழா இன்று 2024.02.19 பி.ப 03:00மணிக்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், வடமராட்சி வலயக்கல்விப்பணிப்பாளர் திரு.கனகசபை சத்தியபாலன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.சிறப்பு விருந்தினர்களாக யா/நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் திரு.கணேசரட்ணம் கிருஸ்ணகுமார் அவர்களும், யா/நெல்லியடி மத்திய மகளிர் கல்லூரி அதிபர் திருமதி சத்தியபாமா நவரத்தினம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.