நெல்லியடி முன்பள்ளி மாணவர் கௌரவிப்பும், கலைவிழாவும் – 2023
2023ம் ஆண்டுக்கான நெல்லியடி முன்பள்ளி மாணவர் கௌரவிப்பும், கலைவிழாவும் 2024.03.23 சனிக்கிழமை காலை 09:00மணிக்கு வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை செயலாளர் திரு.கணேசன் கம்ஸநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில், யா/ வதிரி திருஇருதயக்கல்லூரி அதிபர் திரு.க.ஸ்ரீஸ்குமார் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கரவெட்டிக் கோட்டக்கல்வி முன்பள்ளி இணைப்பாளர் திருமதி.கலைவாணி பாலகிருஸ்ணன் அவர்களும், பருத்தித்துறைக் கோட்டக்கல்வி முன்பள்ளி இணைப்பாளர் திருமதி.சுதாஜினிதேவி சுரேஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
2023ம் ஆண்டு நெல்லியடி முன்பள்ளியில் தமது முன்பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து தரம் 01ல் கல்வி கற்பதற்காக முன்பள்ளியிலிருந்து வெளியேறிய மாணவர்களுக்கான பரிசில்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.